கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனகள
Discuss here on கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனகள within the General Discussions forums, part of the The Lounge forum; மனக் குமுறல்கள் பினாமிகள் அதிகமானதால் இங்கே விலையேற்ற சுனாமிகள் சூறாவளியாய்! இலவசத்தின் மாயை -யில் பலியாகி விழி பிதுங்க வழிவைத்ததின் விதியை நொந்து வெந்து போகிறோம்! வாட்டி ...
-
18th Nov 2011, 09:36 PM #1
கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனகள
மனக் குமுறல்கள்
பினாமிகள் அதிகமானதால் இங்கே
விலையேற்ற சுனாமிகள் சூறாவளியாய்!
இலவசத்தின் மாயை -யில் பலியாகி
விழி பிதுங்க வழிவைத்ததின் விதியை நொந்து
வெந்து போகிறோம்!
வாட்டி வதைக்கும் இவ் விலையேற்ற யுக்தி
அரசின் சக்தி!
அந்த இந்த காரணங்களைக் காட்டி
சாமான்யர்களின் முதுகெலும்பில் சமட்டி அடி!
முடுக்குவாதம் வராமல் முடங்கி போகும் அபாயம்!
சுழற்சி முறையில் கொள்ளையடிக்கும் அரசியல் வாதிகள்..
இச் சுழற்சியில் சிக்குண்டு சீரழியும் பொதுமக்கள்.
குடியைக் கெடுக்கும் குடி இங்கே கொடிகட்டி பறக்குது
நாட்டில் முக்கால் வாசிப்பேரை முக்காடு போட வைக்குது!
இதெல்லாம் என்ன
கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனகளா?Last edited by silentsounds; 18th Nov 2011 at 09:55 PM.
with
Regards
Guna (குணா)
வாழு... வாழ விடு..
-
18th Nov 2011, 09:45 PM #2
Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக
Hi Guna,
Ovovoruvarin mana kumuralaiyum yengalin sarbhaga arputhamana kavithai vadivil koduthu asthiteenga.
Thank you very much.
-
18th Nov 2011, 10:00 PM #3
Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக
hi Guna sir,
super kavidhai... indraya soolalai alagai kavidhayakki irukkireergal...sindhikkavum thoondi ulleergal..nandri.
Anitha.
-
18th Nov 2011, 10:01 PM #4
Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக
கலியுக கர்மங்களா, இல்லை நிதர்சனங்களா..
கள்ளை ஒழித்து, மதுவை மலிவாக்கி
கோடி கோடியாய் லாபம் கொண்டு
இலவசம் எனும்
கலாக்காய் காண்பித்து
கழுவில் ஏற்றுவதை போல்
கழுத்தை நெறிக்கும் அரசாங்கம்..
பாலும், மின்சாரமும், போக்குவரத்தும்
பாதிக்கும் மேல் ஏறி
பாமரனை படுகுழியில்
படுக்க வைத்து வேடிக்கை பார்க்கும் அமைச்சர்கள்..
சுவாசிக்கும் காற்றுக்கும் ,
குடிக்கும் நீருக்கும்
ஒரு விலை நிர்ணயித்து
மொத்தமாய் கொள்ளையடித்து
சுவிஸ் வங்கியில் இன்னும்
ஒரு கணக்கு துவங்க
ஆலோசிக்கும் அரசியல் வியாதிகள்..
இவையெல்லாம்
கர்மங்கள் அல்ல
நிதர்சனங்கள்..
நிதர்சனமாய் உணர
வேண்டிய உண்மைகள்..
முதுகெலும்பில்லா தமிழன் தானே
அடுக்கு மொழியில்
தடுக்கி விழாமல்
சாதனைகள் என்ற துர்
போதனைகளை வாய் கிழிய
பேசினால் வாய் பிளந்து
கேட்கும் சாதாரணன் தானே..
தேர்தல் கண்துடைப்பு
வாக்குக்கு பணம்
தூண்டில் மீனாய்
சிக்கி வாழ்னாள் முழுதும்
சிறிது சிறிதாய் சாவு..
செக்கு மாடு போல்
நாம் உழைத்து
அவர்கள் பிழைக்கும்
அவலம்..
தமிழனின் தலையெழுத்து
தமிழ் சினிமா
கதா நாயக, நாயகி,
கதா ஆசிரியர்களிடத்தில்..
தலையாட்டி பொம்மை
போல் தவித்து கொண்டிருப்பது தான்
நம் வாழ்க்கை..
காத்திருப்போம் இன்னொரு
காந்திக்கும், காமராஜனுக்கும்
காலம் முழுக்க.
-மித்ரா
-
Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக
Minsaara vaariyam diwalaga pogum nilaiyil irukupathaal mattum arasiyal vaathigal oorkooti medai pottu podhukootam nadathaamala vida pogiraargal..Minsaarathai patri kavalai padupavargal, Anaithu arasiyal vaathigalum ovvaru katchiyin satellite channellil podhu arikaigalai nadatha vendiyathu thaane...
Ellorukkum mixieum, grinderum, TVum, gas stove ellam koduthu.. ippadi athai samaika ubayokikum porulgal vaanga mudiyaatha uchathil irundhaal koduthavaigal ellam verum aayutha poojaikku than ubayogikka vendum...
Paalukku bathilaaga kallaiyum, mooruku pathilaaga beerayum thaan vaangi kudikka vendum..Athu than athiyavasaya porulgalai vida vizhai kuraindhu irukirathu... Makkalin nilai..
Aanal ondru.. Ithan moolam,Petrol vilaiyetrathin moolam makkal podhu perundhugalai ubogithaal less carbon emission irukum. evvaru petrolai sikkanam seiyalaam endra awareness varum.. traffic kuraikirathaa endru parpom.. Veli sandhaiyil vikkatha car galalai ellam indiavil introduce panni petrol vilayai etru kiraargal.. Athai viduthu.. veli naadugalil ippodhu hybrid vagai car galai thaan veli yidukiraargal..Athu Petrol + Battery power..moolam ubayogikka padubavai... Idhu indiavukku thaan migavum ubayogamaana onru... Aaanal thaniyaarin laabam, arasaangathirkku athan moolam kidaikkum laabam endru antha hybrid cars indiavukku vara innum sila pala varudangal aagalam...
.Pazhaya padi sikkanamaaga irupathu eppadi(athan vaaya katti vayitha katti) enbathai ellorum katru kolla vendum... Enna panrathu.. Survival of the Fittest..thaan...Last edited by nlakshmi; 18th Nov 2011 at 10:11 PM.
nlakshmi.
Every closed eye is not sleeping, and every open eye is not seeing.-Bill Cosby
-
18th Nov 2011, 10:16 PM #6
Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக
Hai kanna mitra,
Kalakitta. summa sooravali mathiri suthi adichutta. sabash kanna.
-
18th Nov 2011, 10:19 PM #7
Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக
மனக் குமுறளில்
தத்தம் கருத்துக்களை பதிவு செய்த கௌசல்யா, அனிதா, சங்கமித்ரா மற்றும் லக்ஷ்மி... உங்களனைவரின் மனித நேயத்தை வளர்க்க உதவும் ஊக்குவிப்புகளுக்கு நன்றிகள் பாராட்டுக்கள்.with
Regards
Guna (குணா)
வாழு... வாழ விடு..
-
19th Nov 2011, 11:09 AM #8
- Real Name
- Parasakthi KS
- Gender
- Female
- Join Date
- May 2010
- Location
- Coimbatore
- Posts
- 8,710
- Blog Entries
- 1
Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக&am
Thanks for this thread Guna sir,
Netru kalai ticket in vilai 3 rs, and at night 4rs and today morning 6rs nu solranga... ethu fixed rate nae theriala... 2 rs ticket 6rs ticket na satharana makkal ellam enna pannuvanga..
ithai vida kodumai ennaventral, 6rs amount mattum kettu vangittu 2 rs ticket than kodukaranga....Enna kodumai ithu...
6 rs koduthu ticket vangaren athuku undana ticket ah kodunaga nu, Conductor kita ketta, Avan istathuku pesaran... ஒரு கை தட்டினால் எப்படி ஓசை வரும் ... Bus il matra yarum ethuvume kekkavillaye... Aanal thangalukkul pesi kolkintranar..
மக்கள் இப்படி அலட்சியத்துடன் இருப்பதால் தான், அரசியல்வாதிகள் நம் தலையில் மிளகாய் அரைத்து கொண்டு இருக்கின்றனர்.
அது உங்களது உழைப்பு, அதை இன்னும் எத்தனை நாட்களுக்கு எவனுக்கோ தாரைவார்த்துக் கொடுப்பீர்கள்.. இனியாவது கேள்விகள் கேளுங்கள் மக்களே...Last edited by Parasakthi; 19th Nov 2011 at 11:25 AM.
-
19th Nov 2011, 05:25 PM #9
Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக&am
விலை ஏற்றம் - சில நன்மைகள்!!
தமிழகத்தில் தற்போது கொண்டுவந்துள்ள விலையேற்றத்தால் மக்கள் பெரும் ஏமாற்றத்துடனும், கோபத்துடனும்
இருக்கிறார்கள். அதனால் நன்மை எதுவும் இல்லை என்று எண்ணிவிட வேண்டாம்..
இதோ சில நன்மைகள்.
பால் விலையேற்றம்
- நடிகர்களின் படங்களுக்கு இரசிகர்கள் பாலாபிசேகம் செய்வதைக் குறைத்துக்கொள்வார்கள்.
- சோம்பேறிகளின் கூடாரமாகத் திகழும் டீக்கடைகளின் எண்ணிக்கை குறையும், அங்கு செல்வோர் எண்ணிக்கையும் குறையும்.
எரிபொருள் விலையேற்றம்
- வாகனப் பயன்பாடு குறைவதால் சுற்றுச்சூழல் சீர்கேடு கட்டுப்பாட்டுக்குள் வரும்.
- வாகன நெரிசல் குறைவதோடு, சாலைவிபத்துக்களும் குறையும்.
மின்சார விலையேற்றம்
இரவு படிக்கும் மாணவர்கள், மின்செலவைக் குறைக்க இரவு படிப்பதை நிறுத்திக் கொள்வார்கள். இல்லாவிட்டால் மின்சாரம் தானே நின்றுவிடும்.
காற்றுக்காகவாவது வீட்டுக்கொரு மரம் வளர்ப்போம் என்ற சிந்தனை மக்கள் மனதில் மலரும்.
மக்கள் தொகை குறையும்
- வறுமைக் கோட்டுக்குக் கீழே வாழ்பவர்கள் வாழமுடியாமல் கொலை, கொள்ளை என ஈடுபடுவார்கள்.. அவ்வாறு வாழ முடியாதவர்கள் தற்கொலை செய்துகொள்வார்கள்.
புரிதல்
- அரசு என்னென்னவோ இலவசமாகத் தந்ததே..
- இந்த விலையேற்றமும் இலவசங்கனின் வரிசையில் வந்த இலவசம் தான் என்பதையும்...
- இது வரை தந்த இலவசங்களின் விலைப்பட்டியல் தான் இந்த விலையேற்றம் என்பதையும் மக்கள் புரிந்துகொள்வார்கள்.
சில்லறைத் தட்டுப்பாடு குறையும்
நம்மாளு - தேநீர் எவ்வளவுப்பா?
கடைக்காரர் - 6 ரூபாய்
நம்மாளு - ஏன்பா 6,7 ன்னு வெச்சுக்கிட்டு 10 ரூபாய்ன்னு வெச்சிடலாம்ல “சில்லறைத் தட்டுப்பாடு“ வராது பாருங்க..
கடைக்காரர் - !!! இவன் திட்டுறானா!! யோசனை சொல்றானா!!
எல்லாம் விலையேத்தற அரசு “மதுபானம், புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்களுக்கு அதிக விலையேற்றினாலாவது போதையால் மடியும் மக்களின் விழுக்காடு குறையும்.. அவர்களின் குடும்பத்தார் மகிழ்ச்சியடைவார்கள்..
அட!!
ஏன்னபா புலம்பறீ்ங்க..
எல்லாத்தையுமே அரசு ஒரு “தொலைநோக்குப் பார்வை“யோட தான் செய்திருக்கிறது!!
நன்றி: முனைவர் இரா.குணசீலன்With Regards,
Sumathi Srini
“Nothing is impossible as impossible itself says i'm possible”
-
24th Nov 2011, 07:57 AM #10
Re: கலியுக கர்மங்களா? இல்லை கலியுக நிதர்சனக
வேதனையிலும் வேதனை!
அரசியல் வாதிகளின் அடாவடிகள்
விடாப்பிடியாகி விட்டது..!
பாராளுமன்றங்கள், நாடாளுமன்றங்கள்
கூடினால் வேதனை தரும் நிகழ்வுகள்
அடிதடி அட்டகாசங்கள்!
மாண்பு மிகு அரசியல் வாதிகள்
மக்கள் நலன் பேச கூடும்போது மட்டும்
ஏற்படும் ஏடாகூடங்கள் ஏராளம்!
மாநகராட்சி கூட்டத்திலும் குழாய் அடிச் சண்டை
மக்களுக்காக இல்லை!
இத் தரம்தாழ்ந்த செயல்களையும் செய்கைகளையும்
செயலிழக்க வைக்கும் சக்திகளும் கூட
முன்னுதாரணமாய் இருப்பதுதான்
அரசியலின் அடிப்படை
என்றிருப்பதுதான் வேதனையிலும் வேதனை!with
Regards
Guna (குணா)
வாழு... வாழ விடு..
Similar Threads
-
இந்து கலாச்சாரம் - 'கோயில்களும், சிற்பங்கī
By sumathisrini in forum Temples, Gods & GoddessReplies: 1Last Post: 4th Apr 2012, 05:48 PM -
கணினியில் அதிக நேரம் செலவிடுகிறீர்களா?
By sumathisrini in forum General Health ProblemsReplies: 1Last Post: 27th Dec 2011, 10:17 AM -
குழந்தையை காண செல்பவர்கள் யோசிக்கலாமே!!!
By nlakshmi in forum New Born BabyReplies: 4Last Post: 17th Oct 2011, 09:00 AM -
காலையில் எழுந்திருக்க கஷ்டமா ? இது உங்கள
By revamanian in forum Interesting FactsReplies: 2Last Post: 4th Sep 2011, 10:11 PM -
தமிழில் பெயர்கள் சில உங்களுக்காக. - Tamil Baby Names
By silentsounds in forum Baby NamesReplies: 18Last Post: 21st May 2011, 02:01 AM


95Likes
LinkBack URL
About LinkBacks

Reply With Quote
Bookmarks