Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Page 4 of 4 FirstFirst ... 234
Results 31 to 38 of 38
Like Tree6Likes

ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி

Discuss here on ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி within the In-Laws forums, part of the Family & Relationship forum; ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி - 17 பொழுதை எப்படி செலவழிக்கிறான் என்பதை வைத்து ஆணை எப்படி தர நிர்ணயம் செய்வது என்பது பார்த்தோம். இம்முறை நேரத்தை ...

  1. #31
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,734
    Blog Entries
    5

    Re: ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி



    ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி - 17

    பொழுதை எப்படி செலவழிக்கிறான் என்பதை வைத்து ஆணை எப்படி தர நிர்ணயம் செய்வது என்பது பார்த்தோம். இம்முறை நேரத்தை தவிர மீதமுள்ள வளங்களை அவன் எப்படி செலவழிக்கிறான் என்பதை பற்றி தெரிந்துக்கொள்ளலாமா?

    நம் கலாச்சாரத்தில் பல காலத்திற்கு ஆணுக்கு மட்டும் தான் ஆஸ்தி, ஆண் மட்டும் தான் வெளி வேலைக்கு போய் பணம் சம்பாதிக்கலாம் என்கிற ஒரு நிலைப்பாடு இருந்துவந்ததால், ஆணிடம் தான் பணம் புழங்கியது. பெண் அவனை சார்ந்தே வாழ வேண்டிய நிலை இருந்தது. இன்று நிலைமை ரொம்பவே மாறி இருந்தாலும், இன்றும் பல பிற்போக்கான ஆண்கள், மனைவியின் வருமானத்தையும் வாங்கி அதையும் தன் கட்டுபாட்டிலேயே வைத்துக்கொள்ள வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

    நம்மூர் பெண்களும், சம்பாதிக்கும் காசையெல்லாம் கணவன் கையில் கொடுத்து வைப்பது தான் “தமிழ் கலாச்சாரம்” என்று கண்டதுக்கெல்லாம் கலாச்சாரத்தோடு கனெக்ஷன் கொடுத்து குழம்பி போகிறார்கள். இது இப்படி இருக்க, இன்றும் பல குடும்பங்களில் பணம் என்பது கணவன் கையிலேயே புழங்கும் சமாசாரமாகத்தான் இருக்கிறது. தன்னுடைய சின்ன சின்ன தேவைகளுக்கு கூட மனைவி, கணவனின் கையை எதிர்பார்க்கும் நிலையில் தான் இருக்கிறாள்.

    இப்படி பெரும்பாலான பெண்கள் பொருளாதார விஷயத்தில் சார்பு நிலை ஜீவராசிகளாகவே வாழும் போது, இவர்கள் எப்படி பட்ட ஆணை தேர்ந்தெடுத்தால் வாழ்க்கை நிம்மதியாக இருக்கும்? உதாரணத்திற்கு இரண்டு நிஜ வாழ்க்கை சம்பவங்களை சொல்கிறேனே.
    முதல் ஆசாமி பெரிய மில்லியனர். அவரின் ஒரு கை அசைவிற்கே பல ஆயிரம் சம்பாதிக்கும் ஒரு செழிப்பான வேலையில் இருந்தார். அவருக்கு திருமணம் ஆனது. மனைவியுடம் முதன் முதலில் ஹோடலுக்கு போனார்.

    மனைவியும் தன்னை மணந்த கனவன் என்பதனாலேயே அவன் ஒரு பெரிய ஹீரோ என்றே நினைத்து விட்டாள். அதனால் தன் ஹீரோ தன்னிடம் மிக கனிவாக, என்ன சாப்பிடுகிறாய் என்றெல்லாம் கேட்டு, உபசரித்து, அன்பு பாராட்டுவான் என்று நினைத்தால், தலைவர் அவளிடம் எதுவுமே பேசாமல் ஒரு பிட்சாவை வாங்கி இரண்டாக கிழித்து அவளுக்கு கால் வாசி வைத்து விட்டு, தான் முக்கால் வாசியை மென்று விழுங்க ஆரம்பித்தார். மனைவி தன் பேரதிர்சியை விழுங்கிவிட்டு பிட்சாவை கொறித்து முடித்தாள். அந்த கடையில் ஒரு பிட்சா வாங்கினால் ஒரு லோட்டா நிறைய கோலா இலவசம். அதனால் ஆளுக்கு பாதி கோலா குடித்தார்கள். அவ்வளவு தான், மணவாழ்க்கையின் முதல் வெளி சாப்பாடு இப்படியே இனிதே முடிய, மனைவி, மனமுடைந்து போய் அலுப்புடன் வெளியே நடக்க, பக்கத்து கடையில் ஐஸ்கிரீம் விற்றுக்கொண்டிருந்தார்கள். அதை கூட கவனிக்கும் நிலையில் தலைவி இல்லை. ஆனால் தலைவன், “ஐஸ்கிரீம் சாப்பிடுறியா?” என்று கேட்க, “அப்பாடா, இப்போதாவது எனக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதே, பரவாயில்லையே என் கணவன் அவ்வளவு மோசமில்லைப்பா” என்று மனைவி நிம்மதி பெருமூச்சுடன், “ஒகே” சொல்லி எல்லா பல்லையும் காட்டி தலையாட்ட, கணவன் சுருசுருப்பாய் ஐஸ்கிரீம் கடைக்கு நடந்தான்.

    போன வேகத்திலேயே திரும்பியும் வந்தான். வெறும் கையுடன். “என்னாச்சு, ஐஸ்கிரீம்?” என்று மனைவி புரியாமல் விழிக்க, கணவன் படு கவலையாய் சொன்னான், “ரொமப் காஸ்ட்லியா இருக்கு, நூறு ரூபாயாம்” நூறு ரூபாய் எல்லாம் ஒரு காஸ்டிலியா, இது கூட செலவழிக்க முடியலை, நீ என்ன பெரிய மில்லியனர்? உன் மூஞ்சிக்கெல்லாம் கல்யாணம் ஒரு கேடா! என்று எல்லாம் மனதில் பட்டதை கேட்கவா முடியும். புது கல்யாண பெண், “அட அல்பமே” என்று மனதிற்குள் ஏசிவிட்டு மௌனமாக இருந்துவிட்டாள். பிறகு தான் போக போக தெரிந்துக்கொண்டாள், அவன் பெரிய மில்லியனராக இருந்தாலும் எச்சை கையால் காக்காய் கூட ஓட்டாத வடிகட்டிய கஞ்சபிஸினாரி என்று.

    இப்படி பணவிஷயத்தில் கருமியாக இருந்தால், சரி போனால் போகிறது, பணமா பெரிது, அன்பு தான் முக்கியம் என்று மனதை தேற்றிக்கொள்ளலாம். ஆனால் பணத்தில் எத்தனை அற்பமாக இருந்தானோ, அதே போலத்தான் அவன் தன் அன்பை வெளிகாட்டுவதிலும்….மிக மிக சிக்கனமாய், ஒரு வாரத்திற்கு நாலு முத்தம் கொடுத்தான் என்றால் அதுவே அதிகப்படி! அதுவும் அவள் நச்சரித்தால் தான், இல்லை என்றால் தன் பக்கத்தில் ரத்தமும் சதையுமாய் ஒரு பெண் படுத்திருப்பதே தெரியாமல் நன்றாக குரட்டை விட்டு தூங்கினான்…..என்றால், இப்படி பட்ட ஆணுக்கு எத்தனை மார்க் போடலாம்?

    அடுத்த கதாநாயகன் மில்லியனர் எல்லாம் இல்லை. அவன் ஒரு சாதாரண வேலையில் சாதாரண சம்பளத்தில் இருந்த ஒரு சாதாரணன். அவனுக்கு ஒரு கேர்ள் ஃபிரெண்ட். அவளை இவனுக்கு ரொம்பவே பிடிக்கும். அவளுடன் மணிக்கணக்கில் பேசினால் தான் அவனுக்கு தூக்கமே வரும். அவளை பார்த்துக்கொண்டே இருந்தால் அவனுக்கு பசி கூட எடுக்காது. அவளுக்காக செலவு செய்ய அவனிடம் அவ்வளவு பணம் கொட்டிகிடக்கவில்ல. என்றாலும் தாஜ் மகால் கட்டமுடியாவிட்டாலும் காதலில் தானும் ஒரு ஷா ஜெகான் என்று நினைக்கும் சுபாவம் அவனுக்கு. அவனால் அவளுக்கு விலை உயர்ந்த பரிசு பொருட்களை வாங்கித்தர முடியாவிட்டாலும், அழகான பொருட்களை பார்க்கும் போதெல்லாம் அவளை தான் நினைத்துக்கொண்டான். அவளை வெளியே அழைத்து சென்ற போதெல்லாம், கணக்கு பார்க்காமல் பணம் செலவழிக்க தயாராக இருந்தான். அவன் இப்படி தாராளமாய் செலவழிக்க முன் வருவதை பார்த்து, இவளே, “இவ்வளவு செலவா, வேண்டாம்!” என்று ஆட்சேபிக்கலானாள். ஆனால் அவனால் அவளிடம் சிக்கனம் பார்க்க முடியவில்லை.

    இப்படி பணத்தில் எந்த அளவு தாராளம் காட்டினானோ, அதே அளவிற்கு கணக்கு பார்க்காமல் தான் தன் அன்பையும் கொட்டி காட்டினான். அவளை தொடாமல் அவனால் இருக்க முடியாது. கற்பனையிலாவது அவளை கட்டிபிடித்துக்கொண்டிருப்பதாக நினைத்துக் கொண்டால் தான் அவனுக்கு தூக்கமே வரும். இப்படி பணம், அன்பு, உடம்பு என்று தன்னிடம் இருந்த வளங்களை எல்லாம் அவளுக்காகவே செலவழிக்க அவன் விரும்பினான். அவளை இப்படி எல்லாம் மகிழ்வித்து பார்ப்பதில் அவனுக்கு அவ்வளவு சந்தோஷம்….இப்போது சொல்லுங்கள், இந்த ஆணுக்கு எவ்வளவு மார்க் போடலாம்?

    நிச்சயம் ஐஸ்கிரீம் வாங்கி தர கணக்கு பார்த்த மில்லியனரை விட, கணக்கே பார்க்காமல் அன்பை கொட்டிய இந்த இரண்டாவது ஆசாமிக்கு தானே மார்க் அதிகமிருக்கும். காரணம் கணக்கு பார்த்து ஈடுபட்டால் அது காதல் இல்லை, இப்படி அன்பு காட்டவே கணக்கு பார்க்கும் ஆணை துணையாய் அடைவதை விட மோசமான துற்பாக்கியம் வேறு எதுவும் இருக்க முடியாது.

    ஆகையால் ஸ்நேகிதிகாள், உங்கள் பட்டியலில் இருக்கும் ஆண்களின் குணாதிசயத்தை கவனியுங்கள். எதற்கெடுத்தாலும் கணக்கு பார்க்கிற கஞ்சபிசினாரி அவன் என்றால், காலத்திற்கும் அவனோடு வாக்கு வாதம் செய்தே போரடித்து போகும் உங்கள் வாழ்க்கை. இந்த மாதிரி கருமிகள் பணத்தால் மட்டுமின்றி பாசத்தாலும் பட்டினி போட்டு விடுவார்கள் என்பதால் இந்த ரக அற்ப கேஸுகள் நாட் ஓகே அட் ஆல்.

    அதற்காக, ஓவர் ஊதாடித்தனத்துடன் இருக்கிறதோ, இல்லையோ, கடன் வாங்கியாவது கொட்டி கவிழ்க்கிறேன் என்றிருக்கும், பணத்தின் அருமை தெரியாத கேஸாக இருந்தான் என்றால், காலத்திற்கும், கடன் காரர்களுக்கு நீங்கள் பதில் சொல்ல வேண்டி வரும். அதனால் அந்த மாதிரியான ஊதாரி மன்னர்களும் நாட் ஓகே.

    பணம் முக்கியம் தான், ஓரளவுக்கு சிக்கனமாய் இருக்க தெரிந்தவன் தான். ஆனால் நீங்கள் அவன் வாழ்வில் முக்கியமான ஒரு அங்கம், அவன் சாம்பிராஜியத்தின் மஹாராணி நீங்கள் ஒருத்தி மட்டும் தான் என்பதனால், உங்களுக்கு சிறந்ததை மட்டுமே செய்கிறான், அதற்க்காக தன் உடல், பொருள், ஆவி, தன் அன்பு, பாசம், நேரம் என்று எல்லாவற்றையும் தாராளமாக செலவழிக்கிறான் என்றால், இவன் ரொம்ப ரொம்ப ஓகே!

    உங்களுக்கு முற்றிகை இடும் ஆண் கஞ்சனா, ஊதாடியா, அல்லது உங்களுக்காக தன்னையும் தன் வளங்களையும் தாராளமாக செலவழிக்க விரும்பும் காதல் நாயகனா என்பதை சரிபாருங்கள்…..

    ஆண்களை அளந்து பார்க்க இன்னும் வேறு என்னென்ன தர பரிசோதனைகள் உண்டு?
    Banudevi likes this.

  2. #32
    Priyanga Murali's Avatar
    Priyanga Murali is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Aug 2011
    Location
    vanji
    Posts
    235

    Re: ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி

    ஹாய் சக்தி
    மிகவும் பயனுள்ள தகவல்கள்
    இந்த புத்தகம் அனைவர்க்கும் உபயோகமாக இருக்கும் என்று நினைக்கிறேன்
    Attached Files Attached Files
    Banudevi likes this.

  3. #33
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,734
    Blog Entries
    5

    Re: ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி

    thank you for sharing this priyanga
    Priyanga Murali likes this.

  4. #34
    Banudevi's Avatar
    Banudevi is offline Newbie
    Gender
    Female
    Join Date
    Mar 2012
    Location
    Chennai
    Posts
    65

    Re: ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி

    Thankyou verymuch parasakthi ,you done a great job

    Thanks to Priyanga Murali for the book
    Parasakthi likes this.

  5. #35
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,734
    Blog Entries
    5

    Re: ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி

    Quote Originally Posted by Banudevi View Post
    Thankyou verymuch parasakthi ,you done a great job

    Thanks to Priyanga Murali for the book
    Thanks for your Comments Banu

  6. #36
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,734
    Blog Entries
    5

    Re: ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி

    ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி - 18

    உங்களை முற்றுகை இடும் ஆண், பெண்களிடம் கண்ணியமாக நடக்க தெரிந்த ஜெண்டில்மேனா, அல்லது, மகளிர் மட்டும் இருக்கையில் முந்திக்கொண்டு அமரும் காட்டுமிராண்டியா; தித்திக்க தித்திக்க பேசி கவிழ்த்துவிடும் காசாநோவா ரகமா, அல்லது அளவாய் பேசி, இன்னும் கொஞ்சம் பேச மாட்டானா என்று ஏங்க வைக்கும் ரகமா; சொன்ன சொல்லை காப்பாற்றும் கற்புக்கரசனா; அல்லது வாய்ப்பந்தல் போட்டு நம்ப வைத்து கழுத்தறுக்கும் நயவஞ்சகனா; வேலை வெட்டி என்று இருக்கும் ஹீரோவா; வெட்டியாய் திரியும் ஸீரோவா; என்று பல விஷயங்களை அனலைஸ் செய்திருப்பீர்கள்... அதன் தொடர்ச்சியாக இந்த வாரம், ஆணிடம் கட்டாயம் இருந்தே ஆக வேண்டிய ஒரு மஹா முக்கியமான குணத்தைப் பற்றி பார்ப்போம்.

    அதென்ன அவ்வளவு மஹா முக்கியமான மேட்டர், என்கிறீர்களா? அது தான் துணிவு. பெண்களுக்கும் துணிவு உண்டு தானே, அப்புறம் இந்த குணம் ஆணிடம் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன? என்று நீங்கள் கூட ஆட்சேபிக்கலாம்.

    ஆனால், என்ன தான் வீரம் என்பது பெண்மைக்கும் பொதுவான விஷயமாக இருந்தாலும், ஆண்கள் வீரமாக இருப்பது தான் அவர்களுக்கு அழகு என்பதே சமூகக் கருத்தாக இருந்திருக்கிறது.

    இந்த சமூகம் ஏன் இப்படிப்பட்ட கருத்துக்களை வைத்துக்கொண்டிருக்கிறது? என்கிறீர்களா? அது ஒரு பெரிய கதை. உங்களுக்காக ரொம்பச் சுருக்கமாய் சொல்ல முயற்சிக்கிறேன்... மனிதர்கள் தோன்றிய புதிதில், பெண்கள் தான் வேட்டைக்கெல்லாம் போய்க் கொண்டிருந்தார்கள். இது பெரிய அதிசயமெல்லாம் இல்லை. இயற்கையில் எல்லா ஜீவராசியிலுமே பெண் தான் ஆணைக் காட்டிலும் பெட்டர் ஹண்டர். சிங்கமாகட்டும், புலியாகட்டும், கொசுவாகட்டும், பேனாகட்டும், சகலவிதமான ஜீவராசியிலும் பெண் தான் ஆணைக் காட்டிலும் அதிக வீரியத்துடன் வேட்டை ஆடும். காரணம் பெண் தனக்கு மட்டும் வேட்டை ஆடுவதில்லை, தன் பிள்ளைகளுக்கும் சேர்த்தல்லவா வேட்டை ஆடுகிறாள். அதனால் இயற்கை, பெண்களுக்கு கூடுதல் வேட்டுவத்திறனை கொடுத்தருளியது இதனாலேயே... ஆண் விலங்கைவிட, சட்டென அசைவுகளை உணரும் விதமாக விழித்திரையும், வாசனைகளை கபால் என கிரகித்துக்கொள்ளும் நாசிநரம்புகளும், நுணுக்கமான ஒலிகளைக் கூட உடனே உணரும் செவிநரம்புகளும், அவ்வளவு ஏன்... விதம் விதமான சுவைகளை உணரும் நாக்கும், தொடுகையில் பல சமிக்ஞைகளை உணரும் சருமமும் பெண் விலங்கிற்கே உண்டு. இதனால் தான் மனிதர்களிலும் பெண்தான் இந்த ஐந்து புலன்களையும் அதிகமாக உபயோகிக்கிறாள்.

    இப்படி இவள் புலன்கள் எல்லாமே செம்ம ஷார்ப்பாய் இருப்பதினாலேயே, பெண் ஆணைவிட தேர்ந்த வேட்டுவச்சியாக இருந்தாள். நிறைய மாமிசம் கொன்று தின்று, ஆதிமனித பெண்கள் ஸ்பஷ்டமாய் வளர, இதன் பக்க விளைவாய் இவர்கள் சுமந்த மனித குட்டிகளும் நன்றாக புஷ்டியாக வளர்ந்தன. இப்படி புஷ்டியாய், பெரிய சைஸாகிவிட்ட மனித குட்டிகளை பெற்றெடுக்கவே,இயற்கை தன் பரிணாம வளர்ச்சி முறைப்படி மனுஷியின் இடுப்பை அகலமாய் விரியச் செய்தது. இடுப்பெலும்பு இப்படி விரிந்ததால் அதனோடு கூடியிருந்த தொடை எலும்பு புரண்டு போனது.

    இப்படி தொடை எலும்பு புரண்டு போனதால் மனிதப் பெண்களால் முன்பைப் போல லாவகமாய் ஓடவோ, நடக்கவோ, மரம் ஏறவோ முடியாமல் போனது. அதுவும் போக, பெரிய பாப்பாவை பெற்று சோர்ந்து போனவளால் என்னத்தை பெரிதாய் வேட்டை ஆடிவிட முடியும்? அதனால் காலப் போக்கில் மனிதப் பெண்கள் நேரடியாக வேட்டைக்குப் போவதை நிறுத்திக்கொண்டார்கள். தனக்காக திறமையாக வேட்டையாடும் ஆணாகப் பார்த்து தேர்ந்தெடுத்து,அவனை கொண்டு தன் ஜீவனத்தை நடத்தும், Second Hand Survival முறைக்கு மாறினார்கள் மனிதப் பெண்கள் எல்லாம்.

    இது சரியான போங்கா இருக்கே? இந்த பெண்கள் எப்படி ஆண்களின் உழைப்பின் மீது இப்படி ஓசிச் சவாரி செய்யலாம், இது ஞாயமே இல்லை, என்று நீங்கள் கூட வாதிடலாம்..... ஆனால் இன்னொரு விஷயமும் இதில் முக்கியமாக கவனிக்க வேண்டும்... பிள்ளைப்பேறு சமாசாரத்தில், ஆணின் பங்கு மிக சொற்பமே. சில மில்லி ஸ்பெர்ம், சில விநாடிகள், சில அசைவுகள், அவ்வளவு தான். இந்த குறைந்த முதலீட்டிலேயே அவன் குலத்தைத் தழைக்க செய்துவிட முடியும். ஆனால் அதே பிள்ளைப் பேற்றில் பெண்ணின் முதலீடோ, ரொம்பவே அதிகம். ஒரு கருமுட்டை, ஒரு கருப்பை, பல லிட்டர் ரத்தம், பல விதமான ஹார்மோன்கள், பத்து மாத சிரமம், அதன் பிறகு பிராணனே போகும் படியான ஒரு பிரசவம், அதன் பிறகும், தொடர்ந்து பாலூட்டல், பிள்ளைப் பராமரிப்பு, என்று ஒரே ஒரு குழந்தையை வளர்க்க ஒரு பெண் தன் ஒட்டுமொத்த வாழ்க்கையையுமே செலவிட வேண்டியுள்ளது.

    இப்படி பிள்ளைப் பேற்றில் பெண்ணின் பங்களிப்பு மிக அதிகம் என்பதாலேயே, ஒருவேளை பெண்கள் நொந்து போய், குழந்தையைப் புறக்கணித்து விட்டாலோ, அல்லது வேறு ஆணுடன் அடுத்த கட்ட உறவுக்கு மாறினாலோ, இந்த முதல் ஆணின் குலம் தழைக்காமல் போய்விடுமே. இப்படி தன் வித்து பிழைக்காமல் போய்விடும் ஆபத்து ஏற்பட்டுவிடக்கூடாது என்று தான் பொறுப்புள்ள அப்பாக்கள் எல்லாம், பிள்ளைப் பராமரிப்பில் தங்கள் பங்களிப்பை இன்னும் அதிகமாகச் செய்ய முற்படுகிறார்கள்.

    இது தான் இயற்கையின் ஏற்பாடு என்றால் பெண், தன் வாழ்க்கையையும் பிள்ளைகளின் வாழ்க்கையையும் சுமுகமாக ஆபத்தின்றி கழிய வேண்டுமானால் அவள் எந்த மாதிரியான ஆணைத் தேர்ந்தெடுத்தால் காரியம் கைகூடும்? சதா சுறுசுறுப்பு, வேட்கை, வேகம், வீரம், வீரியம், துணிவு என்றே இருக்கும், எதற்கும் தயங்காத அசகாய சூரனை தேர்ந்தெடுத்தால் அவளுக்கு நன்மையா? அல்லது எப்போதுமே சோம்பித்திரியும், ஆபத்து என்றாலே அஞ்சி ஒளியும் சோப்லாங்கியை தேர்ந்தெடுத்தால் அவளுக்கு நல்லதா?

    ஆபத்துனா எனக்கு அல்வா மாதிரி என்று அஞ்சாமல் களமிறங்கும் ஆசாமி தான் நிச்சயம் அவளுக்கு நன்மை செய்வான். இப்படி ஒரு வீரனைத் தேர்ந்தெடுத்தால்தானே, வேட்டை, உணவு ஆகியவை மட்டும் இன்றி, எதிரியின் தாக்குதல், விலங்கு அச்சுறுத்தல், இயற்கை சேதம் என்று எந்த வித ஆபத்து நேர்ந்தாலும் இந்தப் பெண்ணுக்கும் அவள் குழந்தைகளுக்கும் பாதுகாப்பு கிடைக்கும்?அதனால் தான் காலம் காலமாக பெண்கள் வீரம் ஒழுகும் ஆண்களைக் கண்டாலே உடனே காதலால் கசிந்துருகிப் போய் விடுகிறார்கள்.

    இப்படி வீரம் நிறைந்த ஆண்களைக் கண்டாலே, பெண்களின் உடம்பில் எக்கச்சக்க ஹார்மோன்கள் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதேபோல, இப்படி தன்னைக் காதலுடன் பார்க்கும் பெண்ணின் பக்கம் வந்தாலே நிஜ ஆண்களின் உடம்பிலும், ஏகத்திற்கு வீர ஹார்மோன்கள் பீறிட்டு ஓடுவதால், கண்ணின் கடைப்பார்வையை பெண்கள் காட்டிவிட்டால், மண்ணில் குமரருக்கு மாமலையும் ஓர் கடுகாம் என்கிற நிலை தான்!

    அதற்காக, எங்கே ஆபத்து? என்று சதா வேண்டாத வம்பை எல்லாம் விலைகொடுத்து வாங்கும் அசட்டு வீரம் கொண்ட அல்டாப்பு பேர்வழியை இந்தப் பெண் தேர்ந்தெடுத்தால், இவன் நிச்சயம் அல்ப ஆயுசிலேயே போய்ச் சேர்ந்து விடுவானே! அதனால், ஜாக்கிரதையாய் யோசித்து, அவசியமானபோது மட்டும் தன் முழு வீரத்தையும் காட்டி காரியத்தை ஜெயிக்கும், Calculated Risk எடுக்க தெரிந்த விவேகமான வீரனாய் பார்த்து தேர்ந்தெடுப்பதுதான் என்றைக்குமே Safe.

    பல சமயத்தில் பெண்கள், போனாப் போகுது, இவனை விட்டா வேற எவனும் கிடைக்கலைன்னா? என்ற பயத்திலோ, போகப் போக சரியா போயிடும் என்ற நப்பாசையிலோ, அதெல்லாம் நான் திருத்தி சரியாக்கிடுவேன் என்கிற ஓவர் கான்ஃபிடன்ஸிலேயோ, வீரம் குறைவாக இருக்கும் ஆண்களுக்கு வாழ்க்கைப் பட்டு போகிறார்கள். ஆனால் போகப் போக அவன் சுபாவமே இவர்களுக்கு பெரிய சுமையாகிப் போக, போயும் போயும் உன்னை மாதிரி ஒரு பயந்தாங்கொள்ளியை கட்டித் தொலைச்சேனே... என்று சதா பாவம் அந்த ஆசாமியைப் போட்டு வார்த்தைகளாலேயே விரை நீக்கம் செய்துவிடுகிறார்கள். இதனால் இந்த தம்பதியினருக்கு மட்டும் அல்ல, குழந்தைகளுக்கும் கூட நிம்மதியே போய் விடும் சூழல் வரலாம். அதனால் சிநேகிதிகளே, ஆரம்பத்திலேயே உஷாராய் இருங்கள். வீரமுள்ள ஆணாய்ப் பார்த்து தேர்ந்தெடுங்கள். அப்படி ஒரு ஆண் கிடைக்காவிட்டால் இட்ஸ் ஓ.கே... கிடைக்கும் வரை ஜாலியாய் லேடி பாச்சுலர் லைஃப்பை என்ஜாய் பண்ணுங்க.

    ஆகையால் சிநேகிதிகளே... உங்களுக்கு பெட்டிஷன் போடும் ஆணின் வீரம் + விவேகம் ஸ்கோரை கவனியுங்கள். ஓரளவிற்கு வீரமும், நிறைய விவேகமும் இருக்கிற ஆணாய் இருந்தால், ஓகே, ப்ரோசீட்!

  7. #37
    umaravi2011's Avatar
    umaravi2011 is offline Commander's of Penmai
    Real Name
    Uma
    Gender
    Female
    Join Date
    Nov 2011
    Location
    Hyderabad
    Posts
    1,052

    Re: ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி

    Dear sakthi
    Thanks really very interesting and useful.

    Uma

  8. #38
    Parasakthi's Avatar
    Parasakthi is online now Super Moderator
    Blogger
    Yuva's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    8,734
    Blog Entries
    5

    Re: ஆண்களை ஹேண்டில் செய்வது எப்படி

    Quote Originally Posted by umaravi2011 View Post
    Dear sakthi
    Thanks really very interesting and useful.

    Uma
    You are welcome Uma

Page 4 of 4 FirstFirst ... 234

Similar Threads

  1. Replies: 12
    Last Post: 30th Mar 2012, 02:24 PM
  2. Replies: 1
    Last Post: 13th Mar 2012, 10:43 PM
  3. Replies: 0
    Last Post: 30th Jun 2011, 04:00 AM
  4. Replies: 1
    Last Post: 30th May 2011, 02:55 PM
  5. Replies: 0
    Last Post: 21st May 2011, 09:19 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •