+ Reply to Thread
Page 1 of 7 1 2 3 ... LastLast
Results 1 to 10 of 65
Like Tree9Likes

பாரதியார் கவிதைகள்

Discuss here on பாரதியார் கவிதைகள் within the Poems forums, part of the Read and Pen here forum; தமிழ் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, காதல் மற்றும் பலவற்றை தம் உணர்ச்சிமிகு கவிதைகளால் எடுத்துரைத்தார் அவைகளில்சில செந்தமிழ் நாடு செந்தமிழ் நாடெனும் ...

  1. #1
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Citizen's of Penmai
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    778

    பாரதியார் கவிதைகள்

    தமிழ் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு, காதல் மற்றும் பலவற்றை தம் உணர்ச்சிமிகு கவிதைகளால் எடுத்துரைத்தார் அவைகளில்சில

    செந்தமிழ் நாடு


    செந்தமிழ் நாடெனும் போதினிலே-இன்பத்
    தேன்வந்து பாயுது காதினிலே-எங்கள்
    தந்தையர் நாடென்ற பேச்சினிலே-ஒரு
    சக்தி பிறக்குது மூச்சினிலே (செந்தமிழ்)

    வேதம் நிறைந்த தமிழ்நாடு-உய்
    வீரம் செறிந்த தமிழ்நாடு-நல்ல
    காதல் புரியும் அரம்பையர்போல்-இளங்
    கன்னியர் சூழ்ந்த தமிழ்நாடு (செந்தமிழ்)

    காவிரி தென்பெண்ணை பாலாறு-தமிழ்
    கண்டதோர் வையை பொருனைநதி-என
    மேவி யாறு பலவோடத்-திரு
    மேனி செழித்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

    முத்தமிழ் மாமுனி நீள்வரையே-நின்று
    மொய்ம்புறக் காக்கும் தமிழ்நாடு-செல்வம்
    எத்தனை யுண்டு புவிமீதே-அவை
    யாவும் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

    நீலத் திரைக்கட லோரத்திலே-நின்று
    நித்தம் தவஞ்செய் குமரிஎல்லை-வட
    மாலவன் குன்றம் இவற்றிடையே-புகழ்
    மண்டிக் கிடக்கும் தமிழ்நாடு. (செந்தமிழ்)

    கல்வி சிறந்த தமிழ்நாடு-புகழ்க்
    கம்பன் பிறந்த தமிழ்நாடு-நல்ல
    பல்வித மாயின சாத்திரத்தின்-மணம்
    பாரெங்கும் வீசுந் தமிழ்நாடு. (செந்தமிழ்)

    வள்ளுவன் தன்னை உலகினுக்கே-தந்து
    வான்புகழ் கொண்ட தமிழ்நாடு-நெஞ்சை
    அள்ளும் சிலப்பதி காரமென்றோர்-மணி
    யாரம் படைத்த தமிழ்நாடு. (செந்தமிழ்)

    சிங்களம் புட்பகம் சாவக-மாதிய
    தீவு பலவினுஞ் சென்றேறி-அங்கு
    தங்கள் புலிக்கொடி மீன்கொடியும்-நின்று
    சால்புறக் கண்டவர் தாய்நாடு. (செந்தமிழ்)

    விண்ணை யிடிக்கும் தலையிமயம்-எனும்
    வெற்பை யடிக்கும் திறனுடையார்-சமர்
    பண்ணிக் கலங்கத் திருள்கெடுத்தார்-தமிழ்ப்
    பார்த்திவர் நின்ற தமிழ்நாடு. (செந்தமிழ்)

    சீன மிசிரம் யவனரகம்-இன்னும்
    தேசம் பலவும் புகழ்வீசிக்-கலை
    ஞானம் படைத்தொழில் வாணிபமும்-மிக
    நன்று வளர்த்த தமிழ்நாடு. (செந்தமிழ்)
    with regards,
    Ilavarasi (இளவரசி)
    Penmai's Team

    Women's online community

  2. #2
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Citizen's of Penmai
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    778
    பார*தியா*ரி*ன் த*மி*ழ் மொ*ழி*ப் ப*ற்*றிய எழு*ச்*சி*க் க*விதை.

    யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
    இனிதாவது எங்கும் காணோம்;
    பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்
    இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு,
    நாமமது தமிழரெனக் கொண்டுஇங்கு
    வாழ்ந்திடுதல் நன்றோ? சொல்லீர்!
    தேமதுரத் தமிழோசை உலகமெலாம்
    பரவும்வகை செய்தல் வேண்டும்.

    யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல்
    வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்,
    பூமிதனில் யாங்கணுமே பிறந்ததிலை;
    உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை;
    ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய்
    வாழ்கின்றோம்; ஒருசொற் கேளீர்!
    சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்
    தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!
    பிறநாட்டு நல்லறிஞ்ர் சாத்திரங்கள்
    தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும்;
    இறவாத புகழுடைய புதுநூல்கள்
    தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும்;
    மறைவாக நமக்குள்ளே பழங்கதைகள்
    சொல்வதிலோர் மகிமை இல்லை;
    திறமான புலமையெனில் வெளிநாட்டோர்
    அதைவணக்கஞ் செய்தல் வேண்டும்.

    உள்ளத்தில் உண்மையொளி யுண்டாயின்
    வாக்கினிலே ஒளியுண் டாகும்;
    வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப்பெருக்கும்
    கவிப்பெருக்க்கும் மேவு மாயின்,
    பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்
    விழிபெற்றுப் பதவி கொள்வார்;
    தெள்ளுற்ற தமிழமுதின் சுவைகண்டார்
    இங்கமரர் சிறப்புக் கண்டார்.
    girija chandru likes this.
    with regards,
    Ilavarasi (இளவரசி)
    Penmai's Team

    Women's online community

  3. #3
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Citizen's of Penmai
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    778
    "யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம்". எனச் சொல்ல தகுதி உடையவர். ஏன் என்றால் அவருக்கு தமிழ், தெலுங்கு, ஹிந்தி, சமஸ்க்ரிதம், பிரெஞ்சு மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றவர்.
    with regards,
    Ilavarasi (இளவரசி)
    Penmai's Team

    Women's online community

  4. #4
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Citizen's of Penmai
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    778

    அச்சமில்லை அச்சமில்லை

    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    இச்சகத்து ளோரெலாம் எதிர்த்து நின்றபோதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    துச்சமாக எண்ணி நம்மைத் தூறு செய்த போதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    பிச்சை வாங்கி உண்ணு, வாழ்க்கை பெற்று விட்ட போதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    இச்சை கொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    கச்சணிந்த கொங்கை மாதர் கண்கள்வீசு போதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    நச்சை வாயிலே கொணர்ந்து நண்ப ரூட்டு போதனும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    பச்சை யூனினையந்த வேற்படைகள் வந்த போதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    உச்சிமீது வானிடிந்து வீழு கின்ற போதினும்
    அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்ப தில்லையே
    girija chandru likes this.
    with regards,
    Ilavarasi (இளவரசி)
    Penmai's Team

    Women's online community

  5. #5
    Penmai's Avatar
    Penmai is offline Administrator Citizen's of Penmai
    Real Name
    Ilavarasi
    Gender
    Female
    Join Date
    Feb 2010
    Location
    Coimbatore
    Posts
    778

    நான்

    வானில் பறக்கின்ற புள்ளெல்லாம் நான்
    மண்ணில் திரியும் மரமெல்லாம் நான்
    கானில் வளரும் மரமலொம் நான். 1
    காற்றும் புனலும் கடலுமே நான்,
    விண்ணில் தெரிகின்ற மீனெலாம் நான்,
    வெட்ட வெளியின் விரிவெலாம் நான்,
    மண்ணில் கிடக்கும் புழுவெல்லாம் நான்
    வாரியிலுள்ள உயிரெலாம் நான். 2
    கம்பனிசைத்த கவியெலாம் நான்,
    காருகர் தீட்டும் உருவமெலாம் நான்,
    இம்பர் வியக்கின்ற மாட கூடம்
    எழில்நகர் கோபுரம் யாவுமே நான்
    இன்னிசை மாத ரிசையுளேன் நான்
    இன்பத் திரள்கள் அனைத்துமே நான்,
    புன்னிசை மாந்தர்தம் பொய்யெலாம் நான்,
    பொறையருந் துன்பப் புணர்ப்பெலாம் நான். 4
    மந்திரங் கோடி இயக்குவோன் நான்
    இயங்கு பொருளின் இயல்பெலாம் நான்
    தந்திரங் கோடி சமைத்துளேன் நான்,
    சாத்திர வேதங்கள் சாற்றினோன் நான். 5
    அண்டங்கள் யாவையும் ஆக்கினேன் நான்
    அவை பிழையாமே சுழற்றுவோன் நான்,
    கண்டபல சக்திக் கணமெலாம் நான்,
    காரண மாகிக் கதித்துளோன் நான். 6
    நானெனும் பொய்யை நடத்துவோன் நான்,
    ஞானச் சுடர்வானில் செல்லுவோன் நான்,
    ஆனபொருள்கள் அனைத்தினும் ஒன்றாய்
    அறிவாய் விளங்குமுதற் சோதிநான். 7
    girija chandru likes this.
    with regards,
    Ilavarasi (இளவரசி)
    Penmai's Team

    Women's online community

  6. #6
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Coimbatore
    Posts
    307

    Re: பாரதியார் கவிதைகள்

    நல்லதோர் வீணை

    நல்லதோர் வீணைசெய்தே-அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி, சிவசக்தி;-எனைச்
    சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
    வல்லமை தாராயோ,-இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
    சொல்லடி,சிவசக்தி!-நிலச்
    சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?


    விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
    வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
    நசையுறு மனங்கேட்டேன்-நித்தம்
    நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
    தசையினைத் தீசுடினும்-சிவ
    சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
    அசைவறு மதிகேட்டேன்;-இவை
    அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?
    Last edited by Angu Aparna; 3rd Aug 2011 at 04:54 PM.
    girija chandru likes this.
    With Regards

    Angu Aparna

  7. #7
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Guru's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    5,791

    Re: பாரதியார் கவிதைகள்

    பராசக்தி


    கதைகள் சொல்லிக் கவிதை யெழுதென்பார்;
    காவி யம்பல நீண்டன கட்டென்பார்;
    விதவி தப்படு மக்களின் சித்திரம்
    மேவி நாடகச் செய்யுளை மேவென்பார்;
    இதய மோஎனிற் காலையும் மாலையும்
    எந்த நேரமும் வாணியைக் கூவுங்கால்,
    எதையும் வேடில தன்னை பராசக்தி
    இன்ப மொன்றினைப் பாடுதல் அன்றியே.


    நாட்டு மக்கள் பிணியும் வறுமையும்
    நையப்பா டென்றொரு தெய்வங் கூறுமே;
    கூட்டி மானுடச் சாதியை ஒன்றெனக்
    கொண்டு வையம் முழுதும் பயனுறப்
    பாட்டி லேயறங் காட்டெனு மோர் தெய்வம்;
    பண்ணில் இன்பமுங் கற்பனை விந்தையும்
    ஊட்டி எங்கும் உவகை பெருகிட
    ஓங்கும் இன்கவி ஓதெனும் வேறொன்றே.


    நாட்டு மக்கள் நலமுற்று வாழவும்
    நானி லத்தவர் மேனிலை யெய்தவும்
    பாட்டி லேதனி யின்பத்தை நாட்டவும்,
    பண்ணி லேகளி கூட்டவும் வேண்டி நான்
    மூட்டு மன்புக் கனலொடு வாணியை
    முன்னுகின்ற பொழுதி லெலாங்குரல்
    காட்டி அன்னை பராசகித ஏழையேன்
    கவிதை யாவுந் தனக்கெனக் கேட்கின்றாள்.


    மழைபொ ழிந்திடும் வண்ணத்தைக் கண்டுநான்
    வானி ருண்டு கரும்புயல் கூடியே
    இழையு மின்னல் சரேலென்று பாயவும்,
    ஈரவாடை இரைந்தொலி செய்யவும்
    உழையெ லாம்இடை யின்றிவ் வானநீர்
    ஊற்றுஞ் செய்தி உரைத்திட வேண்டுங்கால்
    "மழையுங் காற்றும் பராசக்தி செய்கைகாண்
    வாழ்க தாய்!" என்று பாடுமென் வாணியே.


    சொல்லி னுக்கெளி தாகவும் நின்றிடாள்
    சொல்லை வேறிடஞ் செல்ல வழிவிடாள்;
    அல்லி னுக்குட் பெருஞ்சுடர் காண்பவர்
    அன்னை சக்தியின் மேனி நலங்கண்டார்.
    கல்லி னுக்குள் அறிவொளி காணுங்கால்,
    கால வெள்ளத் திலேநிலை காணுங்கால்,
    புல்லி னில்வயி ரப்படை காணுங்கால்
    பூத லத்தில் பராசக்தி தோன்றுமே!
    girija chandru likes this.
    Parasakthi KS

    "Our prime purpose in this life is to help others.
    And if you can't help them, at least don't hurt them."

  8. #8
    Parasakthi's Avatar
    Parasakthi is offline Super Moderator Guru's of Penmai
    Real Name
    Parasakthi KS
    Gender
    Female
    Join Date
    May 2010
    Location
    Coimbatore
    Posts
    5,791

    Re: பாரதியார் கவிதைகள்

    சுதந்திர தாகம்

    என்று தணியும்இந்தச் சுதந்திர தாகம்
    என்று மடியும் எங்கள் அடிமையின் மோகம்?
    என்றெம தன்னை கை விலங்குகள் போகும்?
    என்றெம தின்னல்கள் தீர்ந்துபொய் யாகும்?
    அன்றொரு பாரதம் ஆக்கவந் தோனே!
    ஆரியர் வாழ்வினை ஆதரிப் போனே!
    வென்றி தருந்துணை நின்னரு ளன்றோ?
    மெய்யடி யோம் இன்னும் வாடுதல் நன்றோ? 1

    பஞ்சமும் நோயும் நின் மெய்யடி யார்க்கோ?
    பாரினில் மேன்மைகள் வேறினி யார்க்கோ?
    தஞ்ச மடைந்தபின் கைவிட லாமோ?
    தாயுந்தன் குழந்தையைத் தள்ளிடப் போமோ
    அஞ்சலென் றருள்செயுங் கடமை யில்லாயோ?
    ஆரிய! நீயும் நின் அறம்மறந் தாயோ?
    வெஞ்செயல் அரக்கரை வீட்டிடு வோனே?
    வீர சிகாமணி!ஆரியர் கோனே!
    girija chandru likes this.
    Parasakthi KS

    "Our prime purpose in this life is to help others.
    And if you can't help them, at least don't hurt them."

  9. #9
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Coimbatore
    Posts
    307

    Re: பாரதியார் கவிதைகள்

    சிட்டுக் குருவியைப் போலே


    பல்லவி

    விட்டு விடுதலை யாகிநிற் பாயிந்தச்
    சிட்டு குருவியைப் போலே

    சரணங்கள்

    எட்டு திசையும் பறந்து திரிகுவை
    ஏறியக் காற்றில் விரைவொடு நீந்துவை
    மட்டுப் படாதெங்கும் கொட்டிக் கிடக்குமிவ்
    வானொளி யென்னும் மதுவின் சுவையுண்டு (விட்டு)

    பெட்டையி னோடின்பம் பேசிக் களிப்புற்று
    பீடையி லாததோர் கூடு கட்டிக்கொண்டு
    முட்டைதருங் குஞ்சைக் காத்து மகிழ்வெய்தி
    முந்த வுணவு கொடுத்தன்பு செய்திங்கு (விட்டு)

    முற்றத்தி லேயுங் கழனி வெளியிலும்
    முன்கண்ட தானியம் தன்னைக் கொணர்ந்துண்டு
    மற்றப் பொழுது கதைசொல்லித் தூங்கிப்பின்
    வைகறை யாகுமுன் பாடி விழிப்புற்று. (விட்டு)
    girija chandru likes this.
    With Regards

    Angu Aparna

  10. #10
    Angu Aparna's Avatar
    Angu Aparna is offline Friends's of Penmai
    Gender
    Female
    Join Date
    Jul 2011
    Location
    Coimbatore
    Posts
    307

    Re: பாரதியார் கவிதைகள்

    சக்திக் கூத்து

    பல்லவி

    தகத்தகத்தகத் தகதகவென் றாடோமோ?-சிவ
    சக்திசக்தி சக்தியென்று பாடோமோ? (தகத்)

    சரணங்கள்

    அகத்தகத் தகத்தினிலே உள்நின்றாள்-அவள்
    அம்மையம்மை எம்மைநாடு பொய்வென்றாள்
    தகத்தக நமக் கருள் புரிவாள் தாளொன்றே
    சரண மென்று வாழ்த்திடுவோம் நாமென்றே. (தகத்)

    புகப்புகப் புக வின்பமடா போதெல்லாம்
    புறத்தினிலே தள்ளிடுவாய் சூதெல்லாம்
    குகைக்கு ளங்கே யிருக்குதடா தீபோலே-அது
    குழந்தைகயதன் தாயடிக்குகீழ் சேய்போலே (தகத்)

    மிகத்தகைப்படு களியினிலே மெய்சோர-உள
    வீரம்வந்து சோர்வை வென்று மைதேர
    சகத்தினி லுள்ள மனிதரெல்லாம் நன்றுநன்றென-நாம்
    சதிருடனே தாளம் இசை இரண்டுமொன்றென (தகத்)

    இந்திரனா ருலகினிலே நல்லின்பம்
    இருக்கு தென்பார் அதனை யிங்கே கொண்டெய்தி,
    மந்திரம் போல் வேண்டுமடா சொல்லின்பம்-நல்ல
    மதமுறவே அமுதநிலை கண்டெய்தித் (தகத்)
    girija chandru likes this.
    With Regards

    Angu Aparna

+ Reply to Thread
Page 1 of 7 1 2 3 ... LastLast

Similar Threads

  1. Tamil Jokes - தமிழ் ஜோக்ஸ்
    By ruby_roseline in forum Jokes
    Replies: 8
    Last Post: 24th Apr 2011, 11:48 AM
  2. Pure Tamil Baby Names
    By Penmai in forum Baby Names
    Replies: 0
    Last Post: 27th May 2010, 09:51 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts