Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Page 3 of 3 FirstFirst 123
Results 21 to 22 of 22

ரமணர் ஆன்மிக சிந்தனைகள்

Discuss here on ரமணர் ஆன்மிக சிந்தனைகள் within the Spirituality forums, part of the Home forum; உணவின்றி விரதம் வேண்டாமே * "நான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் "நான்' என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை ...

  1. #21
    sudhar's Avatar
    sudhar is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,028

    Re: ரமணர் ஆன்மிக சிந்தனைகள்



    உணவின்றி விரதம் வேண்டாமே

    * "நான்' என்ற அகந்தையுடன் அனைத்து செயல்களையும் செய்கிறோம். உண்மையில் "நான்' என்பது ஒரு சிறு கருவியே. உன்னை கடவுளாக எண்ணாதே. இதை உணர்ந்து விட்டால், அகந்தை நம்மிடமிருந்து வெளியேறிவிடும்.

    * ஒருவர் முக்தியடைய விரும்பினால் முதலில் நல்ல ஒரு குருவை நாடவேண்டும். இது அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட ஓர் உண்மை.

    * கடவுளும் குருவும் முக்தி அடைவதற்கான வழியை மட்டும் தான் காட்டுவார்கள். நாம் தான், அவர்கள் காட்டிய வழியில் சென்று முக்தி பெற வேண்டும்.

    * நீ ஒருவருக்கு கொடுத்தால் அது உனக்கே கொடுத்துக் கொண்டதாகும். நீ ஒருவரைத் திட்டினாலோ, ஏமாற்றினாலோ உன்னையே திட்டியதும், ஏமாற்றிக் கொண்டதுமாகும். நீ பிறருக்கு தீங்கு செய்யும் போது, உனக்கே தீங்கு செய்து கொள்கிறாய். ஏனெனில் பிறர் வேறு, நீ வேறல்ல.

    * உண்ணாவிரதம் என்பது ஒரு நோன்பு, அது மனதளவில் மட்டுமே இருக்க வேண்டும். உணவை மறுத்து பட்டினி இருந்தால், அது மனதைப் பாதிக்கச் செய்யும். ஆன்மிகவிரிவுக்கு சாத்வீகமான உணவு அவசியம்.

  2. #22
    sudhar's Avatar
    sudhar is offline Commander's of Penmai
    Gender
    Female
    Join Date
    Apr 2011
    Location
    chennai
    Posts
    2,028

    Re: ரமணர் ஆன்மிக சிந்தனைகள்

    இறைவனிடம் சரணடைந்து விடு


    * "ராமா' என்ற சொல்லில் "ரா' என்ற எழுத்து ஆன்ம சொரூபத்தை குறிப்பதாகும். "மா'என்ற எழுத்து "நான்' என்ற ஆணவத்தை குறிக்கிறது. ஒருவர் "ராமா' என்று இடையறாமல் ஜெபித்துக் கொண்டே இருந்தால், "மா' என்ற எழுத்து "ரா' என்ற எழுத்தில் ஐக்கியமாகி மறைந்துவிடுகிறது.

    * "சரணாகதி' என்பது வலிமை மிக்க பிரார்த்தனை. கடவுள் உனக்குத் தேவையான எல்லாவற்றையும் செய்வார் என்ற நம்பிக்கை இருந்தால் அவரிடம் முழுமையாக சரணடைந்துவிடு.

    * இன்பம், துன்பம் இரண்டையும் கடக்கும் வரை சாதனைகளை தொடருங்கள். இறுதியில் உண்மை மட்டுமே எஞ்சி நின்று அதன் முழு பலனை தந்து விடும்.

    * நான் பலவீனமானவன், தீயவன் என்று நினைப்பதுகூட மனிதன் செய்யும் பெருந்தவறாகும். உண்மையில் அவன் பலவீனனும் அல்லன்; தீயவனும் அல்லன், ஒவ்வொரு மனிதனும் தெய்வீகத்தன்மையும், வலிமையும் படைத்தவனே ஆவான். அவனது உலகியல் பழக்க வழக்கங்களும், எண்ணங்களுமே அவனை பலவீனமாக்குகின்றன.

Page 3 of 3 FirstFirst 123

Similar Threads

  1. Replies: 7
    Last Post: 15th Dec 2011, 05:17 PM
  2. Replies: 0
    Last Post: 27th Oct 2011, 07:59 PM
  3. Replies: 0
    Last Post: 22nd Aug 2011, 01:01 AM
  4. Replies: 1
    Last Post: 19th Apr 2011, 12:06 AM
  5. Replies: 0
    Last Post: 24th Mar 2011, 10:23 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •