Did this page help you? Let your friends know about us!!!

Give it a
Results 1 to 2 of 2
Like Tree2Likes
  • 1 Post By Guruji
  • 1 Post By Guruji

சவமான சிவத்தை எழுப்பவல்லது

Discuss here on சவமான சிவத்தை எழுப்பவல்லது within the Spirituality forums, part of the Home forum; குண்டலினி பெண்சக்தி, தவவலிமை, தியான ஆற்றலைப் பெற மூலாதாரத்திலிருந்து வீரியசக்தியை மேலேற்றி ஒவ்வொரு மையமாக கொண்டு சென்று அந்தந்த மையத்தின் நாளமில்லாச் சுரப்பியால் பயனுறும் உடலுறுப்புகளுக்கு ஆரோக்கிய ...

  1. #1
    Guruji is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    x
    Posts
    578

    சவமான சிவத்தை எழுப்பவல்லது



    குண்டலினி பெண்சக்தி, தவவலிமை, தியான ஆற்றலைப் பெற மூலாதாரத்திலிருந்து வீரியசக்தியை மேலேற்றி ஒவ்வொரு மையமாக கொண்டு சென்று அந்தந்த மையத்தின் நாளமில்லாச் சுரப்பியால் பயனுறும் உடலுறுப்புகளுக்கு ஆரோக்கிய ஆற்றலை கொடுத்து மேலேறி ஆக்ஞை வந்ததும் ஆணான சிவத்துடன் இணையும் பேரின்ப ஓட்டத்தில் சிவத்தலமான மூளை உச்சியில் லயப்படும்போது, குண்டலினி சுரோனிதமும் சவமான துயிலில் இருந்த சிவத்தை விழிப்படைய செய்து பேரானந்த நிலை எய்தும் போது, சுகானந்த மின்னணுக்கள் நாடி நரம்புகளில் பாய்ந்து உடலை காய கல்பமாக மாற்றி விடுவதோடு இயக்கப்படாத மூளையை இயங்க வைத்து பிரபஞ்ச த்த்துவார்த்தங்களை அவரவரின் குண்டலினி பிரயோகத்திறிகொப்ப பெறுவராயினர்.
    devibalahrd likes this.

  2. #2
    Guruji is offline Registered User
    Blogger
    Citizen's of Penmai
    Gender
    Male
    Join Date
    Dec 2011
    Location
    x
    Posts
    578

    Re: சவமான சிவத்தை எழுப்பவல்லது

    மூச்சு தான் வாழ்வு, மூச்சு தான் சாவு, மூச்சு தான் தியானம், மூச்சு தான் ஞானம், மூச்சு தான் எல்லாம்.

    மூச்சு உள்ளே இழுக்கப்படும் ஒவ்வொரு முறையும் நீங்கள் பிறக்கிறீர்கள். மூச்சை வெளியே விடும் ஒவ்வொரு முறையும் நீங்கள் இறக்கிறீர்கள். ஒவ்வொரு மூச்சும் உங்கள் பிறப்பாகவும், இறப்பாகவும் உள்ளது. ஒவ்வொரு முறை மூச்சை உள்ளே இழுக்கும் போதும் பிரபஞ்ச சக்தியை உள்வாங்குகிறோம். சக்கரங்கள் என்று சொல்லப்படும் சக்தி மையங்களுக்கு சென்று, அவைகளை உச்ப்பி விடுகிறது.

    மூச்சு தான் நமது ஆரோக்கியமாகவும், நோயாகவும் உள்ளது. பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட யோகசூத்திரங்கள் யாவும் மூச்சை அடிப்படையாக கொண்டவையே.? விவேகனந் ர் போன்றோரெல்லாம் ராஜயோகத்தில் முக்கியத்துவம் கொடுத்து சொல்லுகின்ற பிராணயாமம் என்பது என்ன? ஒரு வகை மூச்சு பயிற்சி தானே.

    புத்தரும் என்னனெனவோ செய்து பார்த்து விட்டு கடைசியில் போதி மரத்தடியில் வந்து அமைதியாக அமர்ந்து கொண்டார். சும்மா இருந்தாரா என்றால் அதுதான் இல்லை. ஒருவிதமான மூச்சு பயிற்சியை செய்தார் அதன் பெயர் விபாசனா என்றும் சொல்லப்படுகிறது. அதன் பிறகு தான் அவர் ஞானம் பெற்றதாக வரலாறு சொல்கிறது. ஞானம் என்ன மூச்சின் உதவியால் இறைவனையே பார்த்ததாக வரலாறு.

    மூச்சு வெறும் தங்கமாக இருந்து பயனில்லை.அ து புடம் போட்ட தங்கமாக மாற வேண்டும். மூச்சு வெறும் வைரமாக இருந்து பயனில்லை. அது பட்டை தீட்டப்பட்ட வைரமாக வேண்டும். அந்த அழகு படுத்தும் வேலையை நீங்கள் தான் செய்ய வேண்டும். அதுதான் மூச்சை ஆழப்படுத்துவது என்பது. அப்போது தான் தங்கத்திற்கும், வைரத்திற்கும் மதிப்பு வரும். அப்போது தான் வெற்றியும் நமதாக இருக்கும்.
    devibalahrd likes this.

Similar Threads

  1. Replies: 3
    Last Post: 13th May 2012, 10:49 AM
  2. Replies: 0
    Last Post: 14th Dec 2011, 12:04 PM
  3. Replies: 2
    Last Post: 8th Oct 2011, 07:46 PM
  4. Replies: 8
    Last Post: 8th Oct 2011, 07:15 PM
  5. Replies: 0
    Last Post: 23rd May 2011, 10:48 PM

Bookmarks

Posting Permissions

  • You may not post new threads
  • You may not post replies
  • You may not post attachments
  • You may not edit your posts
  •