உங்களை வளப்படுத்திக் கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்!

உங்களை வளப்படுத்திக் கொள்ள அதிக நேரம் செலவழியுங்கள்! மற்றவர்களை விமர்சிக்க நேரம் இல்லாது போகும்..!

எல்லோரிடமும் அன்பைக் கொடுத்து ஏமாந்துவிடாதே!

எல்லோரிடமும் அன்பைக் கொடுத்து ஏமாந்துவிடாதே! யாரிடமும் அன்பைப் பெற்றுக்கொண்டு ஏமாற்றிவிடாதே!  

ஒரு மடங்கு திறமை – இரு மடங்கு தேடல்

ஒரு மடங்கு திறமை; இரு மடங்கு தேடல் ; மூன்று மடங்கு பொறுமை; என்ற விகிதத்தில் உன்னை நீ தயார்படுத்தினால் மட்டுமே உன் இலட்சிய இலக்கை அடைய முடியும்…!

அம்மா!

மழையில் நனைந்த என்னை எல்லோரும் திட்டிய போது என் தலையைத் துவட்டிவிட்டு, மழையைத் திட்டியவள், அம்மா!

யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே!

யாருக்காகவும் உன்னை மாற்றிக் கொள்ளாதே! ஒரு வேளை மாற நினைத்தால்… ஒவ்வொரு மனிதர்களுக்கும் நீ மாற வேண்டி வரும்!

நாம் இன்பங்களை நாடி

நாம் இன்பங்களை நாடி ஓடிக்கொண்டு இருக்கும் வரையில், துன்பங்கள் நம்மை நிழல்போல் தொடர்ந்து கொண்டே இருக்கும். துன்பங்கள் நம்மைத் துரத்தாமல் இருக்கவேண்டுமானால், நாம் இன்பங்களைத் துரத்திப்பிடிக்க ஆசைப்படக்கூடாது.